புதிதாய் தோன்ற விருக்கும் நாட்கள்

நாட்கள் ஒன்று கூட
புதிதாய் வரவிருக்கும் ஆண்டினை
எண்ணி மகிழ்ந்திடுவோம்

செல்லும் ஆண்டின் நாட்கள்
தந்த இன்பங்கள் நம்முள்
மறவாமல் இருப்பினும்

சென்ற நாட்கள் நம்மில்
தந்த வாழ்க்கை பாடங்கள்
பலவாயினும்

அதனுள்ளும் இருந்த சோகங்களை
நம் எண்ணங்களில் இருந்து
வெளியேறிட எண்ணிடுவோம்

சோகம் என்னும் சொல்லை
நினைக்க மறந்தும் இன்பம்
என்னும் சொல்லை நினைத்து
மகிழ்ந்திடுவோம்

இனி வரும் நாட்களில்
சோகம் என்னும் சுமைகளைவிட்டுச்
செல்வோம் இன்பம் என்னும்
பயணம் நோக்கி.


புதிதாய் தோன்றிய புதிர்

புரிந்து கொண்ட நாட்களும்
இன்று புதிராய் மாறியது

புதிராய் எழுகின்ற வார்த்தைகளின்
அர்த்தங்களும் புரியாமல் போகிறது

புரிய நினைத்த வார்தைகளுக்குளும்
புதிராய் கேள்வி எழ

கேள்விகள் மட்டும் நிலைக்கிறது
மௌனம் என்னும் பதில்க்கொண்டு

பதில் கொண்ட தேடல்
தொடர்கிறது புரியாமல் தோன்றி

புதிர் கொண்ட வினாக்களால்!!



ஒளியும்
ஒலியும் கொண்டு உதிக்கும்
புது நாளாம் இந்த திருநாளாம்

பார்வைக்கு அழகாய் மின்னும் ஒளி
தந்து

கேட்பதற்கு பெரிதாய் அதிரும் ஒலி
தந்து

நாவின் இனிமைக்கு இனிமை தரும்
இனிப்பால்

தன் சொந்தங்கள் சூழ மகிழ்ச்சி
கொண்டு

ஆண்டின் ஒரு நாளாம் இந்த
திருநாளை மகிழ்ந்து கொண்டாட
வாழ்த்துகிறோம்
மனமே நீயும் என்னை போலவே

என்னில் உள்ள பக்கங்களை புரட்டினால்
விளங்கிடும் உண்மைகள் பலக்கோடி

உன்னுள் இருத்த நாட்களை புரட்டினால்
விளக்கிடும் உண்மைகள் சில செய்தி

என் பக்கங்களின் எண்கள் கொண்டு
எனது கணம் தெரிகிறது

உனது வெற்றியின் எண்ணிக்கை கொண்டு
உனது கணம் உயர்கிறது

என்னும் இருக்கும் வார்த்தைகளின் கணம்
ரசிப்பவரின் தலைக்கு ஏறுகிறது அதன்
இனிமையோடு

உன்னுள் இருக்கும் கனத்தை உனது
தலைக்கு எற்றிடாதே இனிமையும் மாறிடும்
வாழ்வில்

பிறரின் சிந்தனை கொண்டு வெல்வது
எனது வழக்கம்

உனது சிந்தை கொண்டு உயர்வது
உனது பழக்கம்

என்னுள் இருக்கும் பிறரின் எண்ணம்
படித்து உயரும் நீ

உன்னுள் இருக்கும் உன்னை படித்துப்பார்
வாழ்வும் செழிக்கும் புதிதாய்.....
தலைவியின் வெண்ணிற விழிகளில்
அவள் கண்ணிமைகளின் மைக்கொண்டு
தன் இதழல்களால் தலைவனும் கவி படைத்தான்
முத்தம் என்ற தலைப்பில்

பூமிக்கு ஆறுதலாய் மேகத்தின் கண்ணீர் துளிகள்

சூரியனோ வெட்பத்தால் இந்த
பூமியை சுட்டெரிக்க
சுற்றிவரும் மேகமோ பூமியின்
துயர் துடைக்க

தன்மேல் வெட்பத்தை வாங்கி
தன் நிழலை
பூமிக்கு தந்து மகிழ்கிறது
சிறு ஆறுதலாய்

பறந்து விரிந்து கிடக்கும்
மேகங்களோ தன்மீது
வெட்பம் தாழாமல் தன்னை
மறந்து ஒன்று
கூடி பூமியின் துயர்
நினைத்து
புலம்புகிறது

இடியும் மின்னலும் கொண்ட மழையாய்

கனவால் நிஜத்தில் வலிகள்

கண்ட கனவின் பயங்கரம்
என் நினைவுகளை நிறுத்தி
என்னை நிஜத்தின் பாதையில்
நிறுத்தியது

நான் கண்டது கனவு
என ஏற்க மறுத்த
என் மனமோ தேடியது
ஆறுதல் எனும் வார்த்தைகளை

தேடிய மனதிர்க்கோ கிடைத்ததோ
ஆறாமல் வழியை தரும்
வார்த்தைகள் மட்டுமே
எனது விழிகள் உனது விழிகளை நோக்க
உனது விழிகளோ மெதுவாய் சாய்கிறது

சாய்ந்த உனது விழிகளோ மெதுவாய்
மேலே எழ துடிக்க உனது
நாணமோ அதனை தடுக்கிறது

உனது விழிகள் கொண்டுள்ள நாணத்தை
உனது இமைகளின் திரைகள் மறைத்தாலும்

உனது செவ்வித்ழலும் அழகாய் விரிந்திடும்
புதிதாய் பூத்த மலரென
உன்னுள் இருக்கும் வெட்கத்தால்...........

திருமண நாள்

புது தினமாம் இது
இரு மனம் ஒன்றாய்
சேரவிருக்கும் சுப தினமாம்

சுப தினமும் சுக
தினமாம் சொந்தங்கள் ஒன்று
சேர்ந்து மகிழும் பெருதினமாம்

பெருதினத்தில் வந்திருக்கும் நெஞ்சங்கள்
வாழ்த்தி மகிழும் புது
தினமாம் இந்த திருமணம் ....

நம் கால்களின் வலிகளை
போக்க ஒற்றை காலில்
நிற்கிறது இரு சக்கர
வாகனம்

தண்ணீர் தரும் கண்ணீர் துளிகள்

கண் இமைகளை உயர்த்தி
வானம் பார்த்து ஏங்கும்
நெஞ்சங்களுக்கு ஆறுதல் சொல்ல
வந்தது அவர்கள் கண்களில்
கண்ணீர் துளிகள்

மழை துளிகள் இந்த
மண்ணை முத்தமிடுமோ என
ஏங்கிய நெஞ்சங்களின் கன்னங்களில்
ஆறுதலாய் கண்ணீர் துளிகள்
மட்டுமே முத்தம் வைத்து
மறைந்தது.....

பெண்ணே உன் புது
வாழ்வை எண்ணி உன்
உதடுகள் சிறிது வெட்கம்கொள்ள
உன் கருவிழிகளின் நடுவே
அழகிய நிலவை சோகம்
ஆட்கொள்ள உன் நெஞ்சம் பரிதவிக்கும்
உன் அழகிய நினைவுகளை நினைத்தே!

புது உறவுகள் அருகேவர
நிழலென நினைத்த உன்
உறவுகள் உன்னிலிருந்து விலகியிருக்க
உன் நெஞ்சம் பரிதவிக்கும்
உன் அழகிய உறவுகளை நினைத்தே!


புது இடமென புகுந்த
இடம் இருக்க புது
மணவாழ்வின் துவக்கம் அதுவாயினும்
உன் நெஞ்சம் பரிதவிக்கும்
உன் உயிர் தந்த இடம் நினைத்தே !

புது உறவுகள் உன்
வாழ்வின் வரவாயினும் உன்
உறவுகள் பற்றாகிறதோ என
உன் நெஞ்சம் பரிதவிக்கும்
உன் இனிய உறவுகளை நினைத்தே!

தன் மனதில் சேரவிருக்கும்
அவனின் மனம் தன்
எண்ணங்களை ஏற்திடுமோ என்ன
உன் நெஞ்சம் பரிதவிக்கும்
உன் அழகிய எண்ணங்களை நினைத்தே!

மனதின் குமுறல்

நினைத்ததை சொல்லிவிட்டேன் என
நிம்மதியை நாட நினைத்த
என் மனது அவளின்
மனக்குமுறலை போக்க எண்ணுவது
என் மனம் தேடிய
விடைக்காக அல்ல அவள்
மனம் நிம்மதியடைய நினைத்தே

மனதின் குழப்பம்

மனதை சோகம்
ஆட்கொள்ள மகிழ்ச்சியை
மட்டுமே மனம்
நாடுவதும் ஏனோ
ஒரு வார்த்தையை
மட்டும் விரும்புவதால் தானோ

எண்ணத்தின் தெளிவோ
மனதிற்கு புரியவில்லை
கிடைக்குமோ இல்லையோ
என்பதே மனதில் கேள்வியானது.

கேள்வியை எழுப்பிய
மனமோ அதன்
பதிலை ஏற்க மறுக்கிறது

ஏற்க மறுக்கும்
மனதை எண்ணங்களின்
நிலை மாற்றிடுமோ?

அழுகை

உன் அழுகையில் ஆரம்பித்த உறவுகள்
உன் உறவுகளின் அழுகையில் முடிகிறது
வாழ்வின் ஆரம்பமும் முடிவும்
அழுகையிடம் தான் உள்ளதோ!

இரவு

இமைகள் தோறும்
திரைகள் மூடும்
வானில் நட்சத்திரங்களின்
படை ஏறும்
பூமியின் பாதியும்
கருமையில் போகும்
நினைவில் கனவின்
உயிரும் நீழும்
இமையின் திரைகள்
மூடியதும்
கனவின் திரைகள்
திறந்திடும்
இருளின் நிலை

மாறும் வரையில்.....

இனிமை தூரமில்லை

தனிமையின் இடைவெளி தூரம்
இல்லை-இனிமையின் இடைவெளி
நீ காணும் தூரம்
மட்டுமே ஆகையால் கலங்காதே
மானமே உன் தனிமை கண்டு

தனிமை மட்டும் வாழ்க்கை இல்லை

வாழ்வை தெரிந்து கொள்ள
தனிமைதான் பாடம் என்று
என்னதே! தனிமை மட்டும்
சொல்லிடாது வாழ்வின் சோகங்களையும்
அதன் வலிகளையும்

தோல்வியில் ஆனத்தம்

ஒரே வார்த்தையில் என்
கோபம் தோல்வியுற்றது என்
தாய் என்னை கொஞ்சியபோது.

காதலித்தேன்

காதலித்தால் கவினானாகலாம்
என்றனர் நானும்
கவிஞனானேன் என்
எண்ணங்களைக் காதலித்ததால்....

தாளின் நன்றியுரை








விதவையாய் இருந்தேன்
மறுவாழ்வு தந்து
மதிப்பும் பெற
செய்தாய் உன்
அழகிய விரலால்.......

இன்பத்தின் தூரம்

கடல் அலையோ உன்னைத்
தொடும் தூரம்-ஆழ்கடலோ
உன் மனமறியா தூரம்
அதுபோல் உன் லட்சியம்
உன்னை அடைய என்னாமல்
லட்சியத்தை நோக்கி நீ
பயணம் செய் உன்

வாழ்வு இன்பமாகும்....