பூமிக்கு ஆறுதலாய் மேகத்தின் கண்ணீர் துளிகள்

சூரியனோ வெட்பத்தால் இந்த
பூமியை சுட்டெரிக்க
சுற்றிவரும் மேகமோ பூமியின்
துயர் துடைக்க

தன்மேல் வெட்பத்தை வாங்கி
தன் நிழலை
பூமிக்கு தந்து மகிழ்கிறது
சிறு ஆறுதலாய்

பறந்து விரிந்து கிடக்கும்
மேகங்களோ தன்மீது
வெட்பம் தாழாமல் தன்னை
மறந்து ஒன்று
கூடி பூமியின் துயர்
நினைத்து
புலம்புகிறது

இடியும் மின்னலும் கொண்ட மழையாய்

கனவால் நிஜத்தில் வலிகள்

கண்ட கனவின் பயங்கரம்
என் நினைவுகளை நிறுத்தி
என்னை நிஜத்தின் பாதையில்
நிறுத்தியது

நான் கண்டது கனவு
என ஏற்க மறுத்த
என் மனமோ தேடியது
ஆறுதல் எனும் வார்த்தைகளை

தேடிய மனதிர்க்கோ கிடைத்ததோ
ஆறாமல் வழியை தரும்
வார்த்தைகள் மட்டுமே
எனது விழிகள் உனது விழிகளை நோக்க
உனது விழிகளோ மெதுவாய் சாய்கிறது

சாய்ந்த உனது விழிகளோ மெதுவாய்
மேலே எழ துடிக்க உனது
நாணமோ அதனை தடுக்கிறது

உனது விழிகள் கொண்டுள்ள நாணத்தை
உனது இமைகளின் திரைகள் மறைத்தாலும்

உனது செவ்வித்ழலும் அழகாய் விரிந்திடும்
புதிதாய் பூத்த மலரென
உன்னுள் இருக்கும் வெட்கத்தால்...........

திருமண நாள்

புது தினமாம் இது
இரு மனம் ஒன்றாய்
சேரவிருக்கும் சுப தினமாம்

சுப தினமும் சுக
தினமாம் சொந்தங்கள் ஒன்று
சேர்ந்து மகிழும் பெருதினமாம்

பெருதினத்தில் வந்திருக்கும் நெஞ்சங்கள்
வாழ்த்தி மகிழும் புது
தினமாம் இந்த திருமணம் ....