பெண்ணே உன் புது
வாழ்வை எண்ணி உன்
உதடுகள் சிறிது வெட்கம்கொள்ள
உன் கருவிழிகளின் நடுவே
அழகிய நிலவை சோகம்
ஆட்கொள்ள உன் நெஞ்சம் பரிதவிக்கும்
உன் அழகிய நினைவுகளை நினைத்தே!

புது உறவுகள் அருகேவர
நிழலென நினைத்த உன்
உறவுகள் உன்னிலிருந்து விலகியிருக்க
உன் நெஞ்சம் பரிதவிக்கும்
உன் அழகிய உறவுகளை நினைத்தே!


புது இடமென புகுந்த
இடம் இருக்க புது
மணவாழ்வின் துவக்கம் அதுவாயினும்
உன் நெஞ்சம் பரிதவிக்கும்
உன் உயிர் தந்த இடம் நினைத்தே !

புது உறவுகள் உன்
வாழ்வின் வரவாயினும் உன்
உறவுகள் பற்றாகிறதோ என
உன் நெஞ்சம் பரிதவிக்கும்
உன் இனிய உறவுகளை நினைத்தே!

தன் மனதில் சேரவிருக்கும்
அவனின் மனம் தன்
எண்ணங்களை ஏற்திடுமோ என்ன
உன் நெஞ்சம் பரிதவிக்கும்
உன் அழகிய எண்ணங்களை நினைத்தே!