எனது விழிகள் உனது விழிகளை நோக்க
உனது விழிகளோ மெதுவாய் சாய்கிறது

சாய்ந்த உனது விழிகளோ மெதுவாய்
மேலே எழ துடிக்க உனது
நாணமோ அதனை தடுக்கிறது

உனது விழிகள் கொண்டுள்ள நாணத்தை
உனது இமைகளின் திரைகள் மறைத்தாலும்

உனது செவ்வித்ழலும் அழகாய் விரிந்திடும்
புதிதாய் பூத்த மலரென
உன்னுள் இருக்கும் வெட்கத்தால்...........

No comments: