புதிதாய் தோன்ற விருக்கும் நாட்கள்

நாட்கள் ஒன்று கூட
புதிதாய் வரவிருக்கும் ஆண்டினை
எண்ணி மகிழ்ந்திடுவோம்

செல்லும் ஆண்டின் நாட்கள்
தந்த இன்பங்கள் நம்முள்
மறவாமல் இருப்பினும்

சென்ற நாட்கள் நம்மில்
தந்த வாழ்க்கை பாடங்கள்
பலவாயினும்

அதனுள்ளும் இருந்த சோகங்களை
நம் எண்ணங்களில் இருந்து
வெளியேறிட எண்ணிடுவோம்

சோகம் என்னும் சொல்லை
நினைக்க மறந்தும் இன்பம்
என்னும் சொல்லை நினைத்து
மகிழ்ந்திடுவோம்

இனி வரும் நாட்களில்
சோகம் என்னும் சுமைகளைவிட்டுச்
செல்வோம் இன்பம் என்னும்
பயணம் நோக்கி.


புதிதாய் தோன்றிய புதிர்

புரிந்து கொண்ட நாட்களும்
இன்று புதிராய் மாறியது

புதிராய் எழுகின்ற வார்த்தைகளின்
அர்த்தங்களும் புரியாமல் போகிறது

புரிய நினைத்த வார்தைகளுக்குளும்
புதிராய் கேள்வி எழ

கேள்விகள் மட்டும் நிலைக்கிறது
மௌனம் என்னும் பதில்க்கொண்டு

பதில் கொண்ட தேடல்
தொடர்கிறது புரியாமல் தோன்றி

புதிர் கொண்ட வினாக்களால்!!