புதிதாய் தோன்றிய புதிர்

புரிந்து கொண்ட நாட்களும்
இன்று புதிராய் மாறியது

புதிராய் எழுகின்ற வார்த்தைகளின்
அர்த்தங்களும் புரியாமல் போகிறது

புரிய நினைத்த வார்தைகளுக்குளும்
புதிராய் கேள்வி எழ

கேள்விகள் மட்டும் நிலைக்கிறது
மௌனம் என்னும் பதில்க்கொண்டு

பதில் கொண்ட தேடல்
தொடர்கிறது புரியாமல் தோன்றி

புதிர் கொண்ட வினாக்களால்!!

No comments: