தண்ணீர் தரும் கண்ணீர் துளிகள்

கண் இமைகளை உயர்த்தி
வானம் பார்த்து ஏங்கும்
நெஞ்சங்களுக்கு ஆறுதல் சொல்ல
வந்தது அவர்கள் கண்களில்
கண்ணீர் துளிகள்

மழை துளிகள் இந்த
மண்ணை முத்தமிடுமோ என
ஏங்கிய நெஞ்சங்களின் கன்னங்களில்
ஆறுதலாய் கண்ணீர் துளிகள்
மட்டுமே முத்தம் வைத்து
மறைந்தது.....