ஒளியும்
ஒலியும் கொண்டு உதிக்கும்
புது நாளாம் இந்த திருநாளாம்

பார்வைக்கு அழகாய் மின்னும் ஒளி
தந்து

கேட்பதற்கு பெரிதாய் அதிரும் ஒலி
தந்து

நாவின் இனிமைக்கு இனிமை தரும்
இனிப்பால்

தன் சொந்தங்கள் சூழ மகிழ்ச்சி
கொண்டு

ஆண்டின் ஒரு நாளாம் இந்த
திருநாளை மகிழ்ந்து கொண்டாட
வாழ்த்துகிறோம்
மனமே நீயும் என்னை போலவே

என்னில் உள்ள பக்கங்களை புரட்டினால்
விளங்கிடும் உண்மைகள் பலக்கோடி

உன்னுள் இருத்த நாட்களை புரட்டினால்
விளக்கிடும் உண்மைகள் சில செய்தி

என் பக்கங்களின் எண்கள் கொண்டு
எனது கணம் தெரிகிறது

உனது வெற்றியின் எண்ணிக்கை கொண்டு
உனது கணம் உயர்கிறது

என்னும் இருக்கும் வார்த்தைகளின் கணம்
ரசிப்பவரின் தலைக்கு ஏறுகிறது அதன்
இனிமையோடு

உன்னுள் இருக்கும் கனத்தை உனது
தலைக்கு எற்றிடாதே இனிமையும் மாறிடும்
வாழ்வில்

பிறரின் சிந்தனை கொண்டு வெல்வது
எனது வழக்கம்

உனது சிந்தை கொண்டு உயர்வது
உனது பழக்கம்

என்னுள் இருக்கும் பிறரின் எண்ணம்
படித்து உயரும் நீ

உன்னுள் இருக்கும் உன்னை படித்துப்பார்
வாழ்வும் செழிக்கும் புதிதாய்.....
தலைவியின் வெண்ணிற விழிகளில்
அவள் கண்ணிமைகளின் மைக்கொண்டு
தன் இதழல்களால் தலைவனும் கவி படைத்தான்
முத்தம் என்ற தலைப்பில்