மனம்

ஒரு நிமிடம் கண்ட
உருவத்தை எண்ணி
உயிர் தந்த உருவங்களின்
உயிரை வருத்துவது ஏன் மனமே?

மனதின் தடுமாற்றம்

மனமே நீ நிழல்
உலகத்தை நாடுவதும் ஏனோ!
இன்பம் தந்து உன்னை
நெகிழ வைப்பதால் தானோ !
இன்பத்தின் இருளில் மூழ்கிவிட்டாய்
நிஜத்தின் உண்மையை மறந்துவிட்டாய் .

கனவின் மாற்றங்கள்

ஏன் நினைவுகளை
சொற்களாய் சேர்த்துப்
பார்த்தேன் வாக்கியமானது !
வாக்கியத்தின் ஒலிக்கு
எழுத்து வடிவம்
கொடுத்தேன் கவிதையானது!
உண்மைதான் இவைகள்
அனைத்தும் உண்மையாக
ஏன் நினைவுகளின்

பொருள் மட்டும்
பொய்யானது அவை
கனவில் தோன்றியதால்

அழகு

வானவில்லின் நிறம் ஏழு
என்று நானும் எண்ணியிருந்தேன்

பின்பு தான் அறிந்தேன்
அதன் நிரம் கருமை
என்று உன் இரு
புருவங்களை கண்ட பிறகு......